இந்தியாவின் உள்விவகாரங்களில் சீனா தலையிடக் கூடாது: கிரண் ரிஜிஜு

இந்தியாவின் உள்விவகாரங்களில் சீனா தலையிடக் கூடாது: கிரண் ரிஜிஜு
இந்தியாவின் உள்விவகாரங்களில் சீனா தலையிடக் கூடாது: கிரண் ரிஜிஜு

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடக் கூடாது என மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு எச்சரித்துள்ளார்.

சீனாவின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடுவது இல்லை என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தலாய்லாமாவின் அருணாச்சலப் பிரதேச பயணத்துக்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனாவிடம் இந்தியா தனது கருத்தை பதிவு செய்திருக்கிறது. தலாய்லாமாவின் அருணாச்சலப் பிரதேசப் பயணம் முற்றிலும் ஆன்மிக அடிப்படையிலானது என்றும் இதில் அரசியல் எதுவும் இல்லை எனவும் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய அருணாச்சல பிரதேசத்திற்கு, திபெத் பிரிவினை கோரும் தலாய்லாமா சென்றால் இரு நாட்டு உறவுகள் சீர்கெடும் என சீனா எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com