பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து -பிலாவல் பூட்டோவுக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்!

பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து -பிலாவல் பூட்டோவுக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்!
பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து -பிலாவல் பூட்டோவுக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்!

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பரப்பிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரிக்கு, வெளியுறவு துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை வெளிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாதத்தை வளர்த்து உலகம் முழுவதும் பரப்பும் நாடு பாகிஸ்தான் என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிலாவல், குஜராத் மாநிலத்தில் படுகொலைகளை நிகழ்த்தியவர் மோடி என அவதூறாக பேசினார்.

ஏற்கெனவே வெளி உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, பாகிஸ்தான் அமைச்சரின் நாகரீகமற்ற கருத்துகள் குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர், பாகிஸ்தான் எப்போதும் அநாகரிகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், பிலாவல் கருத்துக்கள் அநாகரீகத்தின் உச்சம் என குறிப்பிட்டார்.

வங்காளிகள் மற்றும் இந்துக்கள் மீது பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலையின் நேரடி விளைவாக, 1971-ல் இந்த நாளை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் வெளிப்படையாக மறந்துவிட்டார் என பங்களாதேஷ் போர் குறித்து குறிப்பிட்டார். “துரதிருஷ்டவசமாக, சிறுபான்மையினரை நடத்துவதில் பாகிஸ்தான் பெரிதாக மாறியதாகத் தெரியவில்லை," என அவர் சுட்டிக்காட்டினார்.

"சமீபத்திய மாநாடுகள் மற்றும் நிகழ்வுகள் நிரூபித்தபடி, பயங்கரவாத எதிர்ப்பு உலகளாவில் அதிகமாக உள்ளது. பயங்கரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடம் மற்றும் நிதியளிப்பதில் பாகிஸ்தானின் மறுக்க முடியாத பங்கு உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. பாகிஸ்தான் அமைச்சரின் நாகரீகமற்ற சீற்றம், பயங்கரவாதிகளையும் அவர்களின் பினாமிகளையும் பயன்படுத்தும் பாகிஸ்தானின் இயலாமையின் விளைவாகத் காட்டுகிறது," என தெரிவித்தார்.

"நியூயார்க், மும்பை, புல்வாமா, பதான்கோட் மற்றும் லண்டன் போன்ற நகரங்கள் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற மற்றும் மற்றும் பாகிஸ்தானால் தூண்டப்பட்ட பயங்கரவாதத்தின் வடுக்களை தாங்கி நிற்கின்றன. இந்த வன்முறை அவர்களின் பயங்கரவாத முகாம்களிலிருந்து உருவாகி, உலகின் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது”. "மேட் இன் பாகிஸ்தான்" தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டும் என அரிந்தம் பாக்சி வலியுறுத்தினார்.

"ஒசாமா பின்லேடனை தியாகி என்று புகழும் பாகிஸ்தான், லக்வி, ஹபீஸ் சயீத், மசூத் அசார், சாஜித் மிர், தாவூத் இப்ராஹிம் போன்ற பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. ஐநாவால் தீவிரவாதிகள் என அறிவிக்கப்பட்ட 126 பயங்கரவாதிகளையும், 27 ஐநாவால் நியமிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளையும் கொண்ட நாடு பாகிஸ்தான்" என அவர் சாடினார்.

பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப்பின் தோட்டாக்களில் இருந்து 20 கர்ப்பிணிப் பெண்களின் உயிரைக் காப்பாற்றிய மும்பை செவிலியர் அஞ்சலி குல்தேவின் சாட்சியத்தை, பாகிஸ்தான் அமைச்சர் நேற்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இன்னும் நேர்மையாகக் கேட்டிருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என அவர் தெரிவித்தார். பிலாவல் பூட்டோ பாகிஸ்தானின் தீவிரவாதத்தை மூடிமறைப்பதில் அதிக ஆர்வம் காட்டினார் என அவர் குற்றம் சாட்டினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com