இந்திய அளவில் தூய்மையற்ற ரயில் நிலையங்கள்: மோசமான நிலையில் தமிழ்நாடு

இந்திய அளவில் தூய்மையற்ற ரயில் நிலையங்கள்: மோசமான நிலையில் தமிழ்நாடு

இந்திய அளவில் தூய்மையற்ற ரயில் நிலையங்கள்: மோசமான நிலையில் தமிழ்நாடு
Published on

இந்தியா முழுவதிலும் இருந்து 720 ரயில் நிலையங்களை ஆய்வு செய்த மத்திய அரசு தூய்மையான மற்றும் தூய்மையற்ற ரயில் நிலையங்களில் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தூய்மையான ரயில் நிலையங்களின் முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு ரயில் நிலையம் கூட இடம்பெறவில்லை.

அதே நேரத்தில் தூய்மையற்ற ரயில் நிலையங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 6 ரயில் நிலையங்கள் இடம் பிடித்துள்ளன. இந்தியாவிலேயே அசுத்தமான ரயில் நிலையங்களின் பட்டியலில் பெருங்களத்தூர் முதலிடத்தில் உள்ளது. கிண்டி, வேளச்சேரி, பழவந்தாங்கல், சிங்கபெருமாள்கோவில், கூடுவாஞ்சேரி ஆகிய ரயில் நிலையங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன.

தூய்மையான ரயில் நிலையங்கள்:

1. ஜெய்பூர் (ராஜஸ்தான்)
2. ஜோத்பூர் (ராஜஸ்தான்)
3. துர்காபுரா (ராஜஸ்தான்)
4. ஜம்மு தவாய்
5. காந்திநகர் (ராஜஸ்தான்)
6. சுரத்கார் (ராஜஸ்தான்)
7. விஜயவாடா
8. உதய்பூர் நகரம் (ராஜஸ்தான்)
9. அஜ்மிர் (ராஜஸ்தான்)
10. ஹரித்வார்

தூய்மையற்ற ரயில் நிலையங்கள்:

1. பெருங்களத்தூர் (தமிழ்நாடு)
2. கிண்டி (தமிழ்நாடு)
3. டெல்லி சதார் பஜார்
4. வேளச்சேரி (தமிழ்நாடு)
5. கூடுவாஞ்சேரி (தமிழ்நாடு)
6. சிங்கப்பெருமாள்கோவில் (தமிழ்நாடு)
7. ஒட்டப்பள்ளம் (கேரளா)
8. பழவந்தாங்கல் (தமிழ்நாடு)
9. அராரியா கோர்ட் (பீகார்)
10. குர்ஜா (உத்தர பிரதேசம்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com