கழுத்தில் QR code, மொபைலில் UPI வாலட் - டிஜிட்டல் யாசகம் பெறும் பீகார் மனிதர்!

கழுத்தில் QR code, மொபைலில் UPI வாலட் - டிஜிட்டல் யாசகம் பெறும் பீகார் மனிதர்!
கழுத்தில் QR code, மொபைலில் UPI வாலட் - டிஜிட்டல் யாசகம் பெறும் பீகார் மனிதர்!

பீகார் மாநிலத்தில் உள்ள பெட்டியா (Bettiah) ரயில் நிலையத்தில் மக்களிடமிருந்து யாசகம் பெற்று வாழ்ந்து வரும் யாசகர் ஒருவர் டிஜிட்டல் முறையை பின்பற்றி வருகிறார். டிஜிட்டல் முறையில் தனக்கு யாசகம் கொடுக்க டிஜிட்டல் பேமெண்ட் முறையை அவர் முன்னெடுத்துள்ளார். அதற்காக தனது கழுத்தில் QR கோடையும் தொங்கவிட்டுள்ளார். மேலும் டேப்லெட் போன் மூலம் மொபைல் வாலட்டை நிர்வகித்து வருகிறார் அவர். 

டிஜிட்டல் முறையில் யாசகம் பெற்று வருபவர் 40 வயதான ராஜூ பட்டேல் என தெரியவந்துள்ளது. தன்னை முன்னாள் மாநில முதல்வர் லாலு பிரசாத் யாதவின் தீவிர ஆதரவாளர் என அவர் சொல்லி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மீது வந்த இன்ஸ்பிரேஷனால் இதை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை வானொலி மூலம் தவறாமல் கேட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

“நான் டிஜிட்டல் பேமெண்ட் முறையிலும் யாசகம் பெற்று வருகிறேன். அது எனது வயித்து பசிக்கு தேவையான அளவுக்கு தினமும் யாசகம் பெறுகிறேன். சிறு வயதிலிருந்து இதே ரயில் நிலையத்தில் யாசகம் பெற்று வருகிறேன். இன்றைய டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்றார் போல நானும் மாறியுள்ளேன். 

அண்மைய காலமாக பலரும் எனக்கு யாசகம் கொடுக்க மறுத்து வந்தனர். தங்களிடம் சிறிய அளவிலான தொகை இல்லை என சொல்லி இருந்தனர். சில சுற்றுலா பயணிகள் டிஜிட்டல் முறையில் மட்டுமே பணம் கொடுப்பது மற்றும் பெறுவதாக சொல்லியிருந்தனர். அதனால் நானும் டிஜிட்டல் முறையை பின்பற்ற தொடங்கினேன். நான் இந்த ரயில் நிலையத்தில் தான் வாழ்ந்து வருகிறேன்” என சொல்கிறார் அவர். 

தற்போது சிலர் அவருக்கு டிஜிட்டல் முறையிலும், சிலர் நேரடியாகவும் யாசகம் கொடுப்பதாக தெரிகிறது. வங்கியில் கணக்கு தொடங்குவதற்காக பான் கார்டு வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே ஊரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் அவர் கணக்கு தொடங்கியுள்ளார். தற்போது அந்த வங்கி கணக்கு மூலம்தான் டிஜிட்டல் முறையில் யாசகம் பெற்று வருகிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com