நேற்றைய பாதிப்பை விட சற்று குறைவு - இந்தியாவில் புதிதாக 43,071 பேருக்கு கொரோனா உறுதி

நேற்றைய பாதிப்பை விட சற்று குறைவு - இந்தியாவில் புதிதாக 43,071 பேருக்கு கொரோனா உறுதி

நேற்றைய பாதிப்பை விட சற்று குறைவு - இந்தியாவில் புதிதாக 43,071 பேருக்கு கொரோனா உறுதி
Published on
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 43,071 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் சற்று ஓய்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.34 சதவிகிதமாக உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரத்து 433 ஆக அதிகரித்துள்ளது. 
கடந்த 24 மணி நேரத்தில் 52,299 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 96 லட்சத்து 58 ஆயிரத்து 78 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 955 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்புடன் 4,85,350 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று வரையில் இந்தியா முழுவதும் 35,12,21,306 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com