இந்தியா: ஒரு மாதத்திற்குப் பிறகு 2 லட்சத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியா: ஒரு மாதத்திற்குப் பிறகு 2 லட்சத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியா: ஒரு மாதத்திற்குப் பிறகு 2 லட்சத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
Published on

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,96,427 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு முதன்முறையாக 2 லட்சத்திற்கும் குறைவாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. 

இந்தியாவில் தினசரி 4 லட்சத்துக்கு மேற்பட்ட பாதிப்புகள் என்று உச்சம் பெற்று வந்த கொரோனா, தற்போது இறங்குமுகத்தில் இருக்கிறது. நேற்று 2 லட்சத்து 22 ஆயிரத்து 315 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 1 லட்சத்து 96 ஆயிரத்து 427 பேர் என்ற நிலைக்கு புதிய பாதிப்புகள் இறங்கியுள்ளது. 

இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 69 லட்சத்து 48 ஆயிரத்து 874 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 3,511 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 07 ஆயிரத்து 231 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 850 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 25 லட்சத்து 86 ஆயிரத்து 782 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று வரையில் 19 கோடியே 85 லட்சத்து 38 ஆயிரத்து 999 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com