தொற்று குறைந்தாலும் மரணம் குறையவில்லை: கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,921 பேர் உயிரிழப்பு

தொற்று குறைந்தாலும் மரணம் குறையவில்லை: கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,921 பேர் உயிரிழப்பு

தொற்று குறைந்தாலும் மரணம் குறையவில்லை: கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,921 பேர் உயிரிழப்பு
Published on

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் கீழாக குறைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 70 ஆயிரத்து 421 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை மொத்தமாக 2 கோடியே 95 லட்சத்து 10 ஆயிரத்து 410 ஆக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 501 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 81 லட்சத்து 62 ஆயிரத்து 947 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் இன்று மட்டும் 3 ஆயிரத்து 921 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் மொத்த கொரோனா உயிரிழப்பு 3 லட்சத்து 74 ஆயிரத்து 305 ஆக உள்ளது. 72 நாட்களுக்குப்பிறகு நாட்டில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கு கீழாக குறைந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 9 லட்சத்து 73 ஆயிரத்து 158 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com