ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்pt

போர் பதற்றம்| தற்போது ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை!

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த அறிவிப்பிற்கு ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், காஷ்மீரில் பல்வேறு பகுதிகளிலும் இயல்புநிலை திரும்பியுள்ளது.
Published on

நள்ளிரவில் ஆங்காங்கே தாக்குதல்நடந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று காலை சண்டைநிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் ஜம்முகாஷ்மீரில் பதற்றம் தணிந்துகாணப்படுவதாக தகவல்கள்தெரிவிக்கின்றன.

இயல்புநிலைக்கு திரும்பும் காஷ்மீர்!

ஜம்மு காஷ்மீரில்ரஜோரி, பூஞ்ச், ரியாஸி, சம்பா, அக்னூரில் இரவில் எந்தத் தாக்குதலும்பதிவாகவில்லை. இதனால், வீடுகளைவிட்டு மக்கள் பொதுவெளிக்குவரத் தொடங்கியுள்ளனர்.

அதேபோல், பஞ்சாப்பில் பதான்கோட், பிரோஸ்புர், ராஜஸ்தான் ஜெய்சல்மார் உள்ளிட்ட இடங்களிலும் இரவு நேரத்தில் பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபடாததால் இயல்புநிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com