`Vikram S'-ன் சிறப்பம்சங்கள் என்ன? தனியார் ராக்கெட்கள் பற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் கருத்து!

`Vikram S'-ன் சிறப்பம்சங்கள் என்ன? தனியார் ராக்கெட்கள் பற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் கருத்து!
`Vikram S'-ன் சிறப்பம்சங்கள் என்ன? தனியார் ராக்கெட்கள் பற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் கருத்து!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் 'விக்ரம்-எஸ்' ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கிலோமீட்டர் உயரத்தில் மூன்று செயற்கைக்கோள்களும் நிலை நிறுத்தப்பட உள்ளன.

இந்திய தனியார் விண்வெளித் துறையின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக, விக்ரம்-எஸ் என்ற நாட்டின் முதலாவது தனியார் ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய்ந்தது. இந்திய அரசின் விண்வெளித் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி முகாமையான இன்-ஸ்பேஸ் (இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம்) இதற்கான அங்கீகாரத்தை வழங்கியதை அடுத்து, ஐதராபாத்தைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்  தயாரித்துள்ள இந்த ராக்கெட் சரியாக 11:30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

‘பிராரம்ப்’ திட்டத்தின்கீழ் தனியார் துறையினரால் வடிவமைக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட ராக்கெட்டை ஸ்கைரூட் நிறுவனம் முதன்முறையாக இந்தியாவிலிருந்து விண்ணிற்கு அனுப்புகிறது. முப்பரிமாண அச்சு உபகரணங்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் விக்ரம்-எஸ் ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் 'விக்ரம்-எஸ்' என்ற ராக்கெட் ஏவும் பணிக்கு 'மிஷன் பிரரம்ப்' என பெயரிடப்பட்டு உள்ளது.

இது இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும். இந்த ராக்கெட்டை கடந்த 15-ந்தேதி விண்ணில் ஏவுவதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் மோசமான வானிலை காரணமாக ஏவப்படவில்லை. வருகிற 18-ந் தேதி வானிலை நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதால் இன்றைய தினம் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, பஜூம்க் ஆர்மீனியா, என்-ஸ்பேஸ் டெக் இந்தியா ஆகிய மூன்று செயற்கை கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்லும் என சொல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசுகையில், “விண்வெளி துறையை ஊக்குவிக்கவும், தனியார் துறையினரின் பங்களிப்பிற்கு ஏதுவாகவும், அரசு மேற்கொண்டு வரும் கொள்கைகளின் காரணமாக இந்திய விண்வெளித் துறை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது.

கடந்த ஆறு மாதங்களில், இந்தியாவில் விண்வெளி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரசு அல்லாத நான்கு அமைப்புகளுக்கு இன்-ஸ்பேஸ் நிறுவனம் அதிகாரம் அளித்துள்ளது. விண்வெளி பணிகளில் ஈடுபடுவதற்காக இந்தத் துறை சார்ந்த அரசு அல்லாத அமைப்புகளிடமிருந்து இன்-ஸ்பேஸ் நிறுவனத்திற்கு இதுவரை 150 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன" என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com