அடுத்தக்கட்ட நகர்வு என்ன? ’இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் புதிய முடிவு

I-N-D-I-A கூட்டணியின் அடுத்த பொதுக் கூட்டம், மத்தியப் பிரதேச மாநிலம் போபல் நகரில் அக்டோபர் முதல் வாரம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், 28 கட்சிகளின் I-N-D-I-A கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள், கூட்டணியை ஒருங்கிணைக்கும் அம்சங்கள் குறித்து விவாதிக்க ஒருங்கிணைப்புக்குழுவை அமைத்துள்ளனர்.

இந்த குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் இன்று நடைபெற்றது. 14 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவில் சரத்பவார், டி.ஆர்.பாலு, மெகபூபா முஃப்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தின்போது தொகுதிப் பங்கீடு குறித்த முடிவுகள் மற்றும் இணைந்து பிரசாரம் செய்வது என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து அடுத்த பொதுக் கூட்டம் மத்தியப் பிரதேச மாநிலம் போபல் நகரில் அக்டோபர் முதல் வாரம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com