இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது !
Published on

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 1,024 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் 186 பேரும், கேரளாவில் 182 பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக்ததி்ல இதுவரை 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 4 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மக்கள் முழுமையாக பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பிற மாநில தொழிலாளர்கள், மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேற்றுவோர் மீதும் நடவடிக்கை தேவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com