பூச்சிகள் அதிகம்: கிவி பழங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை

பூச்சிகள் அதிகம்: கிவி பழங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை
பூச்சிகள் அதிகம்: கிவி பழங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை

ஈரான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த கிவி பழங்களில் பூச்சிகள் அதிகம் இருந்த காரணத்தினால் இறக்குமதியை இந்தியா நிறுத்திக் கொண்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பலமுறை பழங்களில் உள்ள பூச்சிகள் குறித்து எச்சரித்தும் இது தொடர்கதையாக இருந்ததால் இறக்குமதி நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தடையை மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய தாவர பாதுகாப்பு அமைப்பு (NPPO) அமல்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் NPPO, கிவி பழங்களுக்கு கடந்த 8-ஆம் தேதி முதல் கொடுத்த பிஸியோ சானிட்டரி சான்றிதழில் எங்கள் தரப்புக்கு உடன்பாடில்லை என சொல்லி ஈரான் வேளாண் அமைச்சகத்திற்கு கடிதம் மூலம் இந்தியா இதனை தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

கடந்த அக்டோபர் முதல் ஈரான் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான கிவி பழங்களில் 'Aspidiotus netil' மற்றும் 'Pseudococcu Calceolariae' என்ற பூச்சிகள் இருந்ததாக இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த 2019-ல் இதேபோல ஈரான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிவி பழங்களில் பூச்சிகள் இருந்ததாகவும் ஈரான் தரப்புக்கு இந்தியா தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து 4000 டன் கிவி பழங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. அதுமட்டுமல்லாது கிவி பழங்களின் உள்நாட்டு உற்பத்தி 13000 டன்னாக இருக்கிறது எனவும் அரசு தரவுகள் சொல்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com