ஆளில்லா போர் விமானம் தயாரிக்கும் ஒப்பந்தம்: இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்து

ஆளில்லா போர் விமானம் தயாரிக்கும் ஒப்பந்தம்: இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்து
ஆளில்லா போர் விமானம் தயாரிக்கும் ஒப்பந்தம்: இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்து

ஆளில்லா போர் விமானம் தயாரிக்கும் திட்ட ஒப்பந்தத்தில் இந்தியா - அமெரிக்கா பாதுகாப்புத் துறைகள் கையெழுத்திட்டுள்ளன.

இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் நடவடிக்கையில் (DTTI) வான் பாதுகாப்பு அமைப்பு கூட்டு செயற்குழு திட்டத்தின்கீழ், இந்த ஒப்பந்தம், கடந்த ஜூலை 30-ம் தேதி கையெழுத்தானது. பாதுகாப்பு உபகரணத்தை கூட்டாக உருவாக்குவதன் மூலம் இரு நாடுகள் இடையேயான பாதுகாப்பு தொழில்நுட்ப கூட்டுறவை, வலுப்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க நடவடிக்கை ஆகும்.

டிடிடிஐ திட்டத்தின்கீழ் நிலம், கடல், வான் மற்றும் விமானம் தாங்கி போர்க் கப்பல்களுக்கான தொழில்நுட்பங்கள், பரஸ்பர ஒப்பந்தத் திட்டங்கள் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆளில்லா போர் விமானத்தை இணைந்து தயாரிப்பதற்கான திட்ட ஒப்பந்தம் டிடிடிஐ திட்டத்தில் மிக முக்கியமான சாதனை ஆகும்.

இந்தத் திட்ட ஒப்பந்தம், ஆளில்லா போர் விமானத்தின் மாதிரியை இணைந்து உருவாக்குவதில், இந்திய விமானப்படை ஆய்வுக்கூடம், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) ஆகியவை வடிவமைப்பு, உருவாக்கம், செய்முறை விளக்கம், பரிசோதனையில் கூட்டாக செயல்படுத்துவதை சுட்டிக்காட்டுகிறது.

இந்தத் திட்ட ஒப்பந்தத்தை செயல்படுத்தியதில், டிஆர்டிஓ-வின் ஏரோநாடிக்கல் வளர்ச்சி மையம் (ஏடிஇ), விமானப்படை ஆய்வு மையத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் இயக்குநரகம், இந்தியா மற்றும் அமெரிக்க விமானப்படைகள் ஆகியவை முக்கிய அமைப்புகளாக உள்ளன.

டிடிடிஐ திட்டத்தின் கீழ் வான்பாதுகாப்பு அமைப்பு கூட்டு செயற்குழுவின் துணைத் தலைவர்களாக உள்ள இந்திய விமானப்படை திட்டங்களுக்கான துணை தளபதி ஏர் வைஸ் மார்ஷல் நர்மதேஸ்வர் திவாரி, அமெரிக்க விமானப்படையின், விமானப்படை பாதுகாப்பு உதவி மற்றும் ஒத்துழைப்பு இயக்குநரகத்தின் இயக்குநர் பிரிகேடியர் ஜெனரல் பிரைன் ஆர்.ப்ரூக்பயூர் ஆகியோர் கையெழுத்திட்டனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com