வங்கக்கடலில் 3 நாடுகளின் கூட்டுப்பயிற்சி   தொடங்கியது

வங்கக்கடலில் 3 நாடுகளின் கூட்டுப்பயிற்சி தொடங்கியது

வங்கக்கடலில் 3 நாடுகளின் கூட்டுப்பயிற்சி தொடங்கியது
Published on

இந்தியாவிற்கு சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளால், அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், வங்காள விரிகுடா கடற்பகுதியில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மேற்கொள்ளும் "மலபார் - 2017" என்ற கூட்டுப் பயிற்சி தொடங்கியது. 

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கடற்படைகள் இணைந்து, மலபார் என்ற பெயரில் வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வது, நீர்மூழ்கிக் கப்பல்களை தடுப்பது, கடலில் மூழ்குவோரை தேடுவது மற்றும் மீட்பது உள்ளிட்ட பல்வேறு கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இந்தாண்டு பயிற்சிக்காக கடந்த 7ம் தேதி புறப்பட்ட அமெரிக்கா மற்றும் ஜப்பான் போர் கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு நேற்று
வந்தடைந்தன. இதையடுத்து, சென்னைக்கு அருகே நடுக்கடலில் "மலபார்-2017" என்ற பெயரில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் மேற்கொள்ளும்
கூட்டுப் பயிற்சி தொடங்கியது. இந்த பயிற்சி வரும் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com