இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உத்தரப் பிரதேச முதல்வருடன் பேசியுள்ளதாகவும், காயமடைந்த அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.