அவதூறு வழக்கு: 'மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால் எப்போதோ செய்திருப்பார்'- நீதிமன்றத்தில் ராகுல் தரப்பு

அவதூறு வழக்கு தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால் அவர் எப்போதோ செய்திருப்பார் என ராகுல் காந்தி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி
ராகுல் காந்திTwitter

மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார். சூரத் நீதிமன்றம் அளித்த அந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார்.

அதை விசாரித்த குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டது. இதையடுத்து, சிறை தண்டனை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க குஜராத் அரசுக்கும், அவதூறு வழக்குத் தொடர்ந்த பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தியின் மேல்முறையீடு வழக்கு: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்த நிலையில் புர்னேஷ் மோடி சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், “ஒரு சமூகத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத, ஆணவம் குணம் கொண்ட ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்காமல், அவரது மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ராகுல் காந்தி தரப்பில் மறுபிரமாணப் பத்திரம் (Rejoinder affidavit) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ராகுல் தரப்பில், “ஐஏஎன்எஸ் கட்டுரையில் இருந்த வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த செய்தியிலிருந்து தங்களுக்கு சாதகமான பாயிண்ட்டுகளை எடுத்துக்கொண்டு வழக்கை சித்தரித்துள்ளனர். அந்த வாட்ஸ்அப் செய்தியின் ஆதாரத்தை வெளியிட மனுதாரர் தவறிவிட்டார். மட்டுமன்றி நீரவ் மோடி, லலித் மோடி போன்ற குலப் பெயர்கள் ஒரே சமூகத்தையோ, சாதியையோ குறிப்பதில்லை.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் காந்தி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர். எனவே அவர் ஆளும் அரசின் நடத்தை மற்றும் செயல்திறனை விமர்சிப்பது வழக்கமான ஒன்றுதான். ராகுல் காந்திக்கு அளித்த தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் அவர் எப்போதோ அதை செய்திருப்பார். ஆகவே இந்த அவதூறு வழக்கு தொடர்பாக ஒருபோதும் ராகுல் மன்னிப்பு கேட்கப் போவதில்லை.

தண்டனை தீர்ப்பை நிறுத்திவைப்பதால் புர்னேஷ் மோடிக்கு ஏற்படப்போகும் பாதிப்பு குறித்து பதில் மனுவில் தெளிவாக இல்லை. எனவே தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் வகையிலும், எதிர்வரும் கூட்டத்தொடரில் பங்கேற்கும் வகையிலும் மேல்முறையீடு மனுவை விசாரித்து முடிக்கும் வரை ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com