மோடி பயங்கரவாதி போல் இருக்கிறார்: ராகுல் காந்தி முன் விஜயசாந்தி சர்ச்சை பேச்சு!

மோடி பயங்கரவாதி போல் இருக்கிறார்: ராகுல் காந்தி முன் விஜயசாந்தி சர்ச்சை பேச்சு!

மோடி பயங்கரவாதி போல் இருக்கிறார்: ராகுல் காந்தி முன் விஜயசாந்தி சர்ச்சை பேச்சு!
Published on

பிரதமர் மோடி, பயங்கரவாதி போல இருக்கிறார் என நடிகையும் காங்கிரஸ் பிரமுகருமான விஜயசாந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானாவின் ஐதராபாத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் நடிகை விஜயசாந்தி ஆவேசமாக பேசினார். 

அவர் கூறும்போது, ’’வரும் மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடிக்கும் ராகுல் காந்திக்கும்தான் போர். பிரதமர் மோடி சர்வாதிகாரியை போல ஆட்சி நடத்துகிறார். அவர் ஜனநாயகத்தைக் கொன்றுவிட்டார். அவர் எப்போது எந்த குண்டு வீசுவார் என்று மக்கள் பயத்துடனேயே இருக்கின் றனர். மக்களை விரும்புவதற்கு பதிலாக அவர்களை பயமுறுத்தும் பயங்கரவாதியாக அவர் இருக்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கிவிடக்கூடாது’’ என்றார்.
விஜயசாந்தியின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com