சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனில் தீ பிடித்து எரிந்தது

சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனில் தீ பிடித்து எரிந்தது

சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனில் தீ பிடித்து எரிந்தது

மேற்கு வங்கத்தில் ஒருவரின் சட்டையில் இருந்த செல்போன் தீ பற்றி எரிந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

மேற்கு வங்க மாநிலம் மிட்நாப்பூரில் உள்ள கடை ஒன்றில் அமர்ந்திருந்தவரின் சட்டை பாக்கெட் திடீரென்று தீ பற்றி எரிந்தது. உடனடியாக தன்னுடைய சட்டை பாக்கெட்டை அவர் பரிசோதித்த போது அதில் இருந்த செல்போன் தீ பிடித்து எரிந்தது. பின்னர் அருகிலிருந்த பொதுமக்கள் அவரின் சட்டையை உடனடியாக கழட்டி வீசினர். இதனால் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் தீ பிடித்து எரிந்த செல்போன் அந்த இடத்தில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. இந்த காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஸ்மார்போன்களை சார்ஜரில் போடும் போது தீ பிடித்து எரியும் சம்பவங்கள் சமீப காலமாக அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில் சட்டைப் பாக்கெட்டில் இருந்த ஸ்மார்ட்போன் அதுவாகவே தீ பற்றி எரிந்துள்ள சம்பவம் பயத்தை ஏற்படுத்தி உள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com