ராஜஸ்தான்: மறுமணம் செய்ய மறுத்த பெண்ணின் மூக்கு, நாக்கை அறுத்த கணவர் உறவினர்கள்

ராஜஸ்தான்: மறுமணம் செய்ய மறுத்த பெண்ணின் மூக்கு, நாக்கை அறுத்த கணவர் உறவினர்கள்
ராஜஸ்தான்: மறுமணம் செய்ய மறுத்த பெண்ணின் மூக்கு, நாக்கை அறுத்த கணவர் உறவினர்கள்

ராஜஸ்தானில் கணவர் இறந்தபிறகு, வேறொரு ஆணை திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் நாக்கு மற்றும் மூக்கை கணவனின் குடும்பத்தார் அறுத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குத்தி(28 வயது). ஆறு வருடங்களுக்கு முன்பு இவர் கோஜே கான் என்ற நபரை திருமணம் செய்துள்ளார். சில ஆண்டுகளில் அவர் இறக்கவே, கணவனின் சகோதரிகள் அவர்கள் குடும்பத்திலேயே வேறொரு நபரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி இருக்கின்றனர்.

அவர்கள் வறுபுறுத்தல் பிடிக்காத குத்தி தனது தாயார் வீட்டில் வந்து தங்கியுள்ளார். செவ்வாய்க்கிழமை, குத்தியின் வீட்டிற்கு வந்த கோஜே கானின் உறவினர்கள் கூர்மையான ஆயுதங்களால் அவரை சராமாரியாக தாக்கியதுடன், குத்தியின் மூக்கு மற்றும் நாக்கையும் அறுத்து, வலது கையையும் உடைத்துள்ளனர். இதைத் தடுக்கச்சென்ற குத்தியின் தாயார் பிஸ்மில்லாவையும் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து குத்தியின் சகோதரர் பசீர் கான் சங்கரா காவல் நிலையத்தில் அவர்கள்மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், கோஜே கானின் உறவினர்களான ஜானு கான், அன்வர் கான் மற்றும் நவாப் கான் என்பவர்களை ஜோத்பூரிலிருந்து கைது செய்ததாக எஸ்.ஹெச்.ஓ.சிங் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com