அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருந்த நேரத்தில் கேரளாவில் திடீரென கனமழை கொட்டியது. இதனால் இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட மழை பாதிப்புகள் காரணமாக நேற்று ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். திருவனந்தபுரத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் பிறந்து 22 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை உட்பட 6 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்களை பேரிடர் மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர். இதேபோன்று பல்வேறு பகுதிகளிலும் மீட்புப்பணி தொடர்கிறது.