\
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் மே3 வரை ரயில் சேவை இல்லை - ரயில்வே துறை

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் மே3 வரை ரயில் சேவை இல்லை - ரயில்வே துறை

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் மே3 வரை ரயில் சேவை இல்லை - ரயில்வே துறை
Published on

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் மே3 வரை ரயில் சேவை இல்லை என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடையும் நிலையில். மேலும் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அதில், “கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். மக்களின் ஒத்துழைப்பால் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.” எனத் தெரிவித்தார். இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் மே3 வரை ரயில் சேவை இல்லை என ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com