கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 4 ஆம் தேதி நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தான். இதையடுத்து உஷாரான மாநில சுகாதாரத் துறை, அப்பகுதி முழுவதும் வீடுகள்தோறும் மாதிரிகளை சேகரித்து மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பியது. கோழிக்கோடு பகுதி முழுவதும் நிபா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளது.