“பீடத்தில் தாமரையை வைக்காமல் விளக்குமாறை டெல்லி மக்கள் வைத்துவிட்டனர்”- இல.கணேசன்

“பீடத்தில் தாமரையை வைக்காமல் விளக்குமாறை டெல்லி மக்கள் வைத்துவிட்டனர்”- இல.கணேசன்
“பீடத்தில் தாமரையை வைக்காமல்  விளக்குமாறை டெல்லி மக்கள் வைத்துவிட்டனர்”- இல.கணேசன்

பீடத்தில் தாமரையை வைக்காமல் டெல்லி மக்கள் விளக்குமாறை வைத்துள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். 

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8-ஆம் தேதி தேர்த‌ல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவியது. இதில் 62.59 சதவிகித வாக்குகள் பதிவானது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.

ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் அனைத்து ஊடகங்களும் கூறியிருந்த நிலையில், தேர்தல் முடிவுகளிலும் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஆம் ஆத்மியின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் பாஜக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் பீடத்தில் தாமரையை வைக்காமல் டெல்லி மக்கள், விளக்குமாறை வைத்துள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். டெல்லி தேர்தல் முடிவு குறித்து பேசிய அவர், “ஜனநாயகத்தில் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம். டெல்லி தேர்தலின் முடிவுகள் பாஜகவிற்கு பின்னடைவு என சொல்ல முடியாது.

கடந்த தேர்தலோடு ஒப்பிட்டுதான் இதனை பேச வேண்டும்.கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதல் இடங்களை பாஜக பெற்றுள்ளது.ஆட்சியில் இருப்பவர்கள் அள்ளி அள்ளி இலவசங்களை கொடுத்துள்ளனர். ஆட்சி பீடத்தை ராஜ்ய லஷ்மி என்பார்கள். அந்த பீடத்தில் தாமரையை வைக்காமல் டெல்லி மக்கள் விளக்குமாறை வைத்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com