தாய்மொழியில் பொறியியல்.. மத்திய அரசின் அறிவிப்பால் ஐஐடி-ல் தமிழ் ஒலிக்க வாய்ப்பு!

தாய்மொழியில் பொறியியல்.. மத்திய அரசின் அறிவிப்பால் ஐஐடி-ல் தமிழ் ஒலிக்க வாய்ப்பு!
தாய்மொழியில் பொறியியல்.. மத்திய அரசின் அறிவிப்பால் ஐஐடி-ல் தமிழ் ஒலிக்க வாய்ப்பு!

பொறியியல் படிப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் பயிலும் நடைமுறையை உருவாக்க மத்திய கல்வித் துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது

இதற்காக நாடு முழுவதிலுமுள்ள ஐஐடி மற்றும் சில என்ஐடி அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தலைமையில் நடைபெற்ற மூத்த அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பொது நுழைவுத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை புதிய வினாத்தாள்களை உருவாக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

இது குறித்து தி ப்ரிண்ட் பத்திரிகைக்கு பேசிய உயர் அதிகாரி ஒருவர், ஐஐடி பனராஸில் இந்தியில் பொறியியல் தொடங்கப்பட உள்ளது. எதிர்காலத்தில் அனைத்து ஐஐடி, ஏன் ஐடிகளிலும் அவரவர் தாய்மொழிகளில் பொறியியல் படிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதற்காக அனைத்து IIT, NIT, AICTE அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தி, குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்ட மெயின்ஸ் தேர்வு 2021 முதல் பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என கடந்த மாதம் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பொறியியல் படிப்பிலும் தாய்மொழி கற்றல் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

தாய்மொழி பொறியியல் என்பதால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுமா? அதனை சமாளிக்கும் திட்டங்களை மத்திய அரசு வைத்துள்ளதா என பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் அதற்கான பதில்களை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com