‘பாரத் மாதா கி ஜெய்’ சொல்லாவிடில் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்..!

‘பாரத் மாதா கி ஜெய்’ சொல்லாவிடில் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்..!
‘பாரத் மாதா கி ஜெய்’ சொல்லாவிடில் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்..!

நீங்கள் ஆர்எஸ்எஸ்-ல் சேரவில்லையென்றால் நீங்கள் இந்து மதத்தை சேர்ந்தவர் அல்ல என பாஜக எம்எல்ஏ ஒருவர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகிலுள்ள கோஷம்மா தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ ராஜா சிங். பாஜக கட்சியை சேர்ந்த இவர் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

பேரணி ஒன்றில் பேசிய எம்எல்ஏ ராஜா சிங், நீங்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேரவில்லை என்றால் நீங்கள் இந்து மதத்தை சேர்ந்தவர் அல்ல என தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “ ஆர்எஸ்எஸ் ஒரு ஆலை போன்றது. அந்த ஆர்எஸ்எஸ்தான் பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் போன்ற ஐகான்களை உருகாக்கியுள்ளது” என்றார்.

அனைவரையும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர வேண்டிக்கொண்ட அவர், இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரும் கட்டாயமாக ‘பாரத் மாதா கி ஜெய்’ மற்றும் ‘வந்த மாதரம்’ கூற வேண்டும் என தெரிவித்தார். அப்படி இல்லையென்றால் அவர் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் அனைத்து இந்துக்களும் தங்களது மதத்தை மேம்படுத்தும் நோக்கில் லவ் ஜிகாத் உள்ளிட்டவற்றிற்கு எதிராக போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com