விமானப் படைக்கு சொந்தமான எஸ்யூ-30 ரக விமானம் விபத்து

விமானப் படைக்கு சொந்தமான எஸ்யூ-30 ரக விமானம் விபத்து

விமானப் படைக்கு சொந்தமான எஸ்யூ-30 ரக விமானம் விபத்து
Published on

தேஷ்பூர் பகுதியில் பயிற்சியின் போது எஸ்.யூ-30 ரக விமானம் விபத்திற்குள்ளானது.

இந்திய விமானப் படைக்கு சொந்தமான Su-30 ரக விமானம் தேஷ்பூர் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது
அந்த விமானம் சரியாக 8.15 மணிக்கு விபத்திற்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த விமானிகள் இருவரும் எந்தவித பாதிப்பும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.  மேலும் இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் விபத்திற்குளாவதற்கு முன்பு விமானத்தின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதாக விமானிகள் தகவல் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி கடந்த வருடம் மட்டும் விமான படைக்கு சொந்தமான 11 விமானங்கள்
விபத்திற்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 46 விமானப்படை வீரர்கள் விமான விபத்தில் தங்களின் உயிரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com