கூர்மையான பார்வை.. வேட்டையாடும் திறன்.. விமானப் படையில் 'முதோல்' இன வேட்டை நாய்கள்!

கூர்மையான பார்வை.. வேட்டையாடும் திறன்.. விமானப் படையில் 'முதோல்' இன வேட்டை நாய்கள்!

கூர்மையான பார்வை.. வேட்டையாடும் திறன்.. விமானப் படையில் 'முதோல்' இன வேட்டை நாய்கள்!

கர்நாடகா மாநிலத்தின் முதோல் இன வேட்டை நாய், இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப் படையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக முதோல் இன வேட்டை நாய்கள், படைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக பாகல்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் 4 முதோல் இன வேட்டை நாய்க் குட்டிகளை இந்திய விமானப் படை அதிகாரிகளிடம் கர்நாடக துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோள் ஒப்படைத்தார்.

கர்நாடக மாநிலத்தின் பாகல் கோட்டை மாவட்டம் முதோல் வட்டத்தில் உள்ள பாரம்பரிய நாட்டு நாய்கள் முதோல் நாய்கள் என அழைக்கப்படுகின்றன. கூர்மையான பார்வையும், வேட்டையாடும் திறனும் கொண்ட இந்த நாய்களை மராட்டிய மன்னர் சிவாஜியும், பாகல்கோட்டை மன்னர் கோர்படாவும் தங்களது படையில் போருக்காக பயன்படுத்தியுள்ளனர். 2017-ம் ஆண்டில் முதோல் இன வேட்டை நாய்கள் இந்திய பாகிஸ்தான் எல்லையை கண்காணிப்பதற்காக ராணுவத்திலும் சேர்க்கப்பட்டன.

இதுகுறித்து இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “முதோல் இன வேட்டை நாய்களுக்கு தொலைதூரத்தில் உள்ளவற்றையும் கூர்மையாக உற்றுநோக்கி கண்டறியும் பார்வைத் திறன் உள்ளது. இதனால் ராணுவத்தில் எல்லையை கண்காணிப்பதற்கும், விமானப் படையில் ஓடுதளத்தை கண்காணிப்பதற்கும் பயன்படுத்த முடியும். விமான ஓடுபாதையில் சுற்றித்திரியும் பறவைகளை விரட்டுவதற்கு நிபுணர்கள் மூலம் இந்த நாய்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இதன் தாடைகள் நீண்டு, கடினப் பொருளை துண்டிக்கும் வகையில் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் சிறப்பாக வேட்டையாடும் திறன் கொண்டது.  எனவே இந்த வகை நாய்களால் நாட்டின் பாதுகாப்புக்கு சிறப்பான பங்களிப்பை வழங்க இயலும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com