\
எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்துவேன்: புதுச்சேரி முதல்வர்

எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்துவேன்: புதுச்சேரி முதல்வர்

எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்துவேன்: புதுச்சேரி முதல்வர்
Published on

மறைந்த புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரதரத்னா வழங்க பிரதமரை வலியுறுத்துவேன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு கலை உலகத்துக்கு பேரிழப்பு என்று தெரிவித்தார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. மேலும் எஸ்பிபிக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்  பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்துவேன் என்றும் கூறினார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார், அவரின் உடல் நேற்று தமிழக அரசின் காவல்துறை மரியாதையுடன் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com