நிர்வாக பணிகளுக்கு நானே பொறுப்பு... கிரண் பேடி

நிர்வாக பணிகளுக்கு நானே பொறுப்பு... கிரண் பேடி
நிர்வாக பணிகளுக்கு நானே பொறுப்பு... கிரண் பேடி

புதுச்சேரியில் அனைத்து நிர்வாகப் பணிகளுக்கும் தானே பொறுப்பு என துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி, ஆளுநர் கிரண் பேடி இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில், புதுவை மக்களுக்கு ‌ஆளுநர் கடிதம் எழுதியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. புதுச்சேரி மக்களுக்கு இனி மாதம்தோறும் கடிதம் எழுதவுள்ளதாக கூறியுள்ள கிரண் பேடி, ஆளுநர் மாளிகை வெறும் தபால் நிலையமாக செயல்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

நிதி மதிப்பீடுகள் மற்றும் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவேன் என்றும் கிரண் பேடி கூறியுள்ளார். தனது அணுகுமுறை யாரையும் தண்டிக்கும் நோக்கில் இருக்காது என்றும், மாறாக ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் எனவும் கிரண் பேடி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் சட்டத்தின் ஆட்சியை, அச்சமின்றி யாருக்கும் சாதகமின்றி அமல்படுத்துவேன் என்றும், ஒற்றுமையை தழைத்தோங்க செய்வது தனது கடமை என்றும் கிரண் பேடி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com