“நான் யாரைக்கண்டும் அஞ்சவில்லை” - ராகுல் காந்தி

“நான் யாரைக்கண்டும் அஞ்சவில்லை” - ராகுல் காந்தி

“நான் யாரைக்கண்டும் அஞ்சவில்லை” - ராகுல் காந்தி
Published on

விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் தான் யாரைக்கண்டும் அஞ்சவில்லை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, ட்விட்டரில் தன்னை விமர்சித்து எழுதியுள்ளதற்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். 

விவசாயிகளுக்கு எதார்த்தம் தெரியும் என்றும், தான் என்ன செய்கிறேன் என்பது விவசாயிகளுக்குத் தெரியும் எனவும் ராகுல் கூறியிருக்கிறார். தாம் சுத்தமானவர் என்றும் பிரதமர் மோடி உள்பட யாரைக்கண்டும் அஞ்சவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர்களால் தன்னைத் தொட முடியாது, வேண்டுமானால் சுட முடியும் என ஜே.பி நட்டாவுக்கு ராகுல் காந்தி பதிலளித்திருக்கிறார். 

முன்னதாக, வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்துதல் குழுக்கள் அதாவது மண்டிகள் மூடப்படும் என்று ராகுல் காந்தி பொய்களை பரப்பி வருவதாக ஜே.பி. நட்டா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com