நள்ளிரவில் இது தேவையா? வெற்றிலை பாக்கு பிரியருக்கு ஒரு நொடியில் நேர்ந்த பரிதாபம்!

நள்ளிரவில் இது தேவையா? வெற்றிலை பாக்கு பிரியருக்கு ஒரு நொடியில் நேர்ந்த பரிதாபம்!
நள்ளிரவில் இது தேவையா? வெற்றிலை பாக்கு பிரியருக்கு ஒரு நொடியில் நேர்ந்த பரிதாபம்!

ஹைதராபாத்தில் வெற்றிலை பாக்கு போட்டு துப்பியபோது கால்தவறி 3வது மாடியிலிருந்து கீழே விழுந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காந்தி நகர் பகுதியிலுள்ள பண்டமாய்சம்மா நகரைச் சேர்ந்தவர் சிந்தாலா ஆனந்த் குமார்(42). தினக்கூலி தொழிலாளரான இவர், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 3வது தளத்தில் 2BHK வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். ஆனந்துக்கு வெற்றிலை பாக்கு பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு 2.30 மணியளவில் உள்ளூர் கடையில் வாங்கி வெற்றிலை பாக்கை வீட்டிற்கு வெளியே நின்று சாப்பிட்டுள்ளார். மூன்றாவது தளத்தின் பால்கனியில் நின்றவாறு எச்சிலை கீழே துப்ப குனிந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் நழுவி நிலை தடுமாறியதில், மூன்றாவது தளத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆனந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கிருந்து மேற்சிகிச்சைக்காக காந்தி மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். அங்கு சிகிச்சையின்போது ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com