“பல் எடுப்பா இருக்கு.. நீ வேண்டாம்” - ஹைதராபாத் பெண்ணை தலாக் செய்த கணவர்?

“பல் எடுப்பா இருக்கு.. நீ வேண்டாம்” - ஹைதராபாத் பெண்ணை தலாக் செய்த கணவர்?
“பல் எடுப்பா இருக்கு.. நீ வேண்டாம்” - ஹைதராபாத் பெண்ணை தலாக் செய்த கணவர்?

ஹைதராபாத்தில் பெண் ஒருவரை அவரது கணவர் பல் எடுப்பாக இருப்பதாக கூறி தலாக் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கணவர் வீட்டார் அதிக வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததாகவும் வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் முகமது முஸ்தபா. இவருக்கு எதிராகவும் இவரது தாயார் மீதும் கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி அவரது மனைவி புகார் ஒன்றை அளித்துள்ளார்.  அதில் தன்னை வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் கொடுமை செய்வதாக கூறி இருந்ததாக தெரிகிறது. இது குறித்து முகமது முஸ்தபாவின் மனைவி, “ அவர் என் வீட்டுக்கு வந்தார். ஆனால் அவருடன் என்னை அழைத்து செல்ல மறுத்துவிட்டார். மேலும் அவர் என் பெற்றோரை மிகத் தரக் குறைவாக நடத்தினார். உடனே மூன்று முறை தலாக் கூறினார்” என்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இவர்களது நிச்சயதார்த்தத்தின் போதே 5 லட்சம் ரூபாய் வரதட்சணையாகவும் ஐந்து டோலாக்கும் கொடுத்ததாகவும் தெரிகிறது. மேலும் கணவரின் தந்தை திருமணத்திற்கு முன்பு மாப்பிள்ளை சவுதி அரேபியாவில் உள்ள மதினாவில் துணி வியாபாரம் செய்து வருவதாக கூறியதாகவும், ஆனால் கணவர் திருமணத்திற்குப் பின் ஆட்டோ ஓட்டுநர் என்று தெரிந்து அதிர்ந்து போனதாகவும் கூறியுள்ளார். 

“என் மாமியார் பத்து பதினைந்து நாட்கள் என்னை வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தார். மேலும், என் கணவர் 'என் பல் வரிசை சரியாக இல்லை. எடுப்பாக இருக்கிறது. ஆகவே என்னுடன் வாழ மாட்டேன்' என்று கூறினார்” என பாதிக்கப்பட்ட பெண் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசும் போது குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இரு வீட்டாரும் சமாதான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com