மகாராஷ்டிரா : மனைவிக்கு போன் மூலம் முத்தலாக் கொடுத்த கணவர் - மனைவி போலீசில் புகார்

மகாராஷ்டிரா : மனைவிக்கு போன் மூலம் முத்தலாக் கொடுத்த கணவர் - மனைவி போலீசில் புகார்
மகாராஷ்டிரா : மனைவிக்கு போன் மூலம் முத்தலாக் கொடுத்த கணவர் - மனைவி போலீசில் புகார்

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள Bhiwandi நகரை சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், தனது கணவர் தனக்கு செல்போன் மூலம் முத்தலாக் கொடுத்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை போலீசார் பதிவு செய்துள்ளனர். 

மேலும் தன்னை தாக்கியதாகவும், கொடுமை செய்ததாகவும், பலமுறை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் கணவரின் குடும்பத்தினர் மீதும் புகார் கொடுத்துள்ளார். 

இந்த நிலையில் தனது தாய் வீட்டுக்கு அந்த பெண் வந்து தங்கியுள்ளார். அப்போது தனது கணவருக்கு போன் செய்து, தன்னை வந்து அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார் அந்த பெண். அப்போது அந்த பெண்ணின் கணவர் போன் மூலம் முத்தலாக் கொடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Photo Credit : DNA

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com