ராணுவத்தை விட அதிகளவு வெடி பொருட்கள் வந்தது எப்படி? நீதிபதிகள் கேள்வி.

ராணுவத்தை விட அதிகளவு வெடி பொருட்கள் வந்தது எப்படி? நீதிபதிகள் கேள்வி.

ராணுவத்தை விட அதிகளவு வெடி பொருட்கள் வந்தது எப்படி? நீதிபதிகள் கேள்வி.

டெல்லியை சுற்றுயுள்ள பகுதிகளில் தீபாவளி பண்டிகையின் போது விற்பதற்காக சுமார் 50 லட்சம் கிலோ வெடி பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகைக்காக டெல்லி மற்றும் சுற்றுப்புறங்களில் 50 லட்சம் கிலோ வெடிபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலால் ஆச்சரியம் அடைந்த நீதிபதிகள் 'இந்திய ராணுவத்திடம் இருப்பதை விட அதிகளவில், வெடிபொருட்கள் டெல்லியில் இருப்பு வைக்கப்பட்டிருப்பது எப்படி?' என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் சீன பட்டாசுகளை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்றும் பல்வேறு தடைகளையும் மீறி சீன பட்டாசுகள் எப்படி தொடர்ந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சீன பட்டாசுகளின் இறக்குமதி செய்தியால் உள்ளூர் பட்டாசு வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com