\
தலைமறைவாக இருந்த ஹனிபிரீத் கைது

தலைமறைவாக இருந்த ஹனிபிரீத் கைது

தலைமறைவாக இருந்த ஹனிபிரீத் கைது
Published on

தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் பஞ்சாபில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பஞ்ச்குலா துணை கமிஷனர் மன்பிர் சிங் தெரிவிக்கையில், பஞ்சாபில் உள்ள ஸிராக்பூர் பட்டியாலா நெடுஞ்சாலையில் ஹனிபிரீத் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

கடந்த மாதம் குர்மீத் ராம் ரஹீம் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் 38 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். வன்முறையைத் தூண்டியதாக ஹனிபிரீத் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனார். தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஹனிபிரீத், தொலைக்காட்சிச் சேனல்களில் தோன்றி தான் தலைமறைவாக இல்லை எனக் கூறியிருந்தார்.

மேலும் குர்மீத் ராம் ரஹீமுக்கும் ஹனிபிரீத்துக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக எழுந்த புகார் குறித்து விளக்கமளித்த அவர், தங்களுக்குள் தவறான உறவு எதுவும் இல்லை எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் பஞ்சாபில் கைது செய்யப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com