விபரீதத்தில் முடிந்த ஹோலி கொண்டாட்டம்! தன்னைத் தானே கத்தியால் குத்தி உயிரை விட்ட வாலிபர்!

விபரீதத்தில் முடிந்த ஹோலி கொண்டாட்டம்! தன்னைத் தானே கத்தியால் குத்தி உயிரை விட்ட வாலிபர்!
விபரீதத்தில் முடிந்த ஹோலி கொண்டாட்டம்! தன்னைத் தானே கத்தியால் குத்தி உயிரை விட்ட வாலிபர்!

ஹோலி கொண்டாட்டங்களில் மூழ்கி நடனமாடிக் கொண்டிருந்த வாலிபர் தன்னைத்தானே கத்தியால் குத்தியதால் ரத்தம் வெளியேறி உயிரிழந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பங்கங்கா பகுதியில் வியாழன் இரவு ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது. இந்த கொண்டாட்டத்தில் மது அருந்திவிட்டு போதையில் 38 வயது நிரம்பிய கோபால் சோலங்கி பங்கேற்றார். மற்றவர்களை போல ஆடிக் கொண்டிருந்த அவர் வித்தியாசமாக “ஸ்டண்ட்” ஒன்றை செய்ய நினைத்தார். கையில் கத்தியை எடுத்து நெஞ்சில் குத்துவது போல நடனமாடினார். ஆனால் உண்மையிலேயே கத்தியால் நெஞ்சை 4 முறை குத்தியிருந்தார்.

இரத்தம் வெளியேறத் துவங்கிய பின்னர்தான் தான் செய்ய செயலின் விபரீதம் புரிந்து நண்பர்களை அழைத்துள்ளார். சோலங்கியின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக அவரை ஸ்ரீ அரவிந்தோ மருத்துவ அறிவியல் கழகத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விளையாட்டுக்காக செய்த செயல் ஒருவர் உயிரையே பறித்துவிட்டதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com