இமாச்சல் முதல்வர் வீர்பத்ர சிங்கின் குடும்ப சொத்துக்களை அமாலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கில் இமாச்சல முதல்வர் வீர்பத்ர சிங்கின் 5 கோடியே 60 லட்சம் மதிப்பிலான குடும்ப சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு வீர்பத்ர சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத் துறையும் விசாரனை நடத்தி வந்தனர். இந்நிலையில், அவருடைய குடும்பச் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.
அதே போல் இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 9ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.