மீண்டும் பலத்த மழை எச்சரிக்கை... தாங்குமா இமாச்சல பிரதேசம்..!

இதுவரை 330 பேர் இந்த இயற்கை சீற்றத்தால் உயிரிழந்துள்ள நிலையில் மீண்டும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மிகபலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. சம்பா, மண்டி மாவட்டங்களில் திடீர் வெள்ளத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. பெருமழை காரணமாக ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து மண் சரிவுகள் ஏற்படுவதுடன் வயல்களில் பயிர்கள் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் சில நாட்களாக தொடர்ந்து கனமழையானது பெய்து வருகின்றது. இத்தொடர் கனமழையால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. அதுமட்டுமல்லாது 11 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.  கடந்த நான்கு நாட்களில் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

இமாச்சல பிரதேசம்
இமாச்சல பிரதேசம்புதிய தலைமுறை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com