தட்டம்மை தடுப்பூசியால் பாதிப்பில்லை: சுகாதாரத்துறை விளக்கம்

தட்டம்மை தடுப்பூசியால் பாதிப்பில்லை: சுகாதாரத்துறை விளக்கம்
தட்டம்மை தடுப்பூசியால் பாதிப்பில்லை: சுகாதாரத்துறை விளக்கம்

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் யாரும் ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டதால் பாதிக்கப்பட வில்லை என புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ராமன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அருகேயுள்ள அரியூரில் உள்ள பள்ளியில் சுமார் 350 மாணவ, மாணவியருக்கு மீசில்ஸ் மற்றும் ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டது. இதில் 30 மாணவ, மாணவிகள் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகினர். இதையடுத்து இவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 10 பேருக்கு மேல் சிகிச்சைக்காக புதுவை அரசினர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனிடைய தடுப்பூசியால் மாண‌வர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ரூபெல்லா தடுப்பூசி பற்றி மக்கள் அச்‌சப்ப‌டத் தேவையில்லை என்றும் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ராமன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com