இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  

தமிழகத்துக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு

அயோத்தி விவகாரத்தில் இன்று முக்கிய முடிவு எடுக்கிறது உச்ச நீதிமன்றம். மத்தியஸ்தர்கள் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை.

சிறார்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவோருக்கு மரண தண்டனை. கொடூரங்களை தடுக்கும் வகையிலான போக்சோ சட்டத் திருத்தத்துக்கு மக்களவை ஒப்புதல்.

மருத்துவக் கல்வியில் மாற்றங்களை கொண்டு வரும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா நிறைவேற்றம். திமுக எதிர்த்து வாக்களிப்பு. எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு.

காஷ்மீருக்கு கூடுதலாக 28 ஆயிரம் துணை ராணுவத்தினரை அனுப்புகிறது மத்திய அரசு. அசாதாரண சூழலால் பதற்ற நிலை நிலவுகிறது.

கோவையில் வங்கிக்குள்ளேயே பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை. நண்பர்களது கடனையும் சேர்த்து செலுத்துமாறு நெருக்கடி கொடுத்ததாக குற்றச்சாட்டு.

தூத்துக்குடிக்கு தப்பிவந்தார் மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதிப். சரக்கு கப்பலில் தப்பி வந்தவரிடம் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com