\
எட்னீர் மடாதிபதி கேசவானந்த பாரதி காலமானார்

எட்னீர் மடாதிபதி கேசவானந்த பாரதி காலமானார்

எட்னீர் மடாதிபதி கேசவானந்த பாரதி காலமானார்
Published on

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள எட்னீர் மடத்தின் தலைமை மடாதிபதி கேசவானந்த பாரதி காலமானார்.

கேரள அரசின் நிலச் சீர்திருத்தச் சட்டத்தின்கீழ் எட்னீர் மடத்தின் நிலங்களை கேரள அரசு கையகப்படுத்தியது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர் கேசவானந்த பாரதி. 

உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே அதிக நாட்கள் விசாரித்த வழக்காக அமைந்தது அவர் தொடுத்த வழக்கு. 79 வயதாகும் அவர் இன்று காலை உயிரிழந்தார். அண்மைக் காலமாக அவர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com