"தோனி போல் இருக்க வேண்டும் என்பதே சுஷாந்தின் விருப்பம்" முன்னாள் காதலி அங்கிதா !

"தோனி போல் இருக்க வேண்டும் என்பதே சுஷாந்தின் விருப்பம்" முன்னாள் காதலி அங்கிதா !

"தோனி போல் இருக்க வேண்டும் என்பதே சுஷாந்தின் விருப்பம்" முன்னாள் காதலி அங்கிதா !
Published on

வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் தோனி போல வாழ வேண்டும் என்பதே சுஷாந்தின் விருப்பமாக இருந்தது என்று அவரது முன்னாள் காதலி அங்கிதா லோக்கான்டே தெரிவித்துள்ளார்.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இளம் நடிகர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியான நடிகை அங்கிதா லோகாண்டே, சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் தனது மவுனத்தை கலைத்துள்ளார்.

அந்தப் பேட்டியில் "நான் சுஷாந்தை நன்கு அறிந்தவள். அவர் மன அழுத்தத்தை அடையக்கூடிய நபர் அல்ல. சுஷாந்தைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததில்லை. அவர் தனது சொந்த கனவுகளை எழுதிக்கொண்டிருந்தார். அவருக்கு ஒரு டைரி இருந்தது. அவரிடம் அடுத்த ஐந்தாண்டு கால திட்டம் இருக்கும். அவர் என்ன செய்ய விரும்புகிறார், அவர் எப்படி இருப்பார் என்கிற தனது கனவுகளை அதில் பட்டியலிட்டிருப்பார்" என்றார் அங்கிதா.

மேலும் " சுஷாந்த் எப்போதும் சொல்வார் தோனிப் போல இருக்க வேண்டும் என்று. வெற்றியோ தோல்வியோ அதை ஒரேவிதமாக பாவிக்கும் திறன் தோனிக்கு உண்டு. அதுபோல தோனி பல கடினமான நேரங்களிலும் அமைதியாக இருப்பார். அதுபோல ஒரு மனப்பான்மையை தான் வளர்த்துக்கொள்ள வேண்டும் என சுஷாந்த் அடிக்கடி என்னிடம் தெரிவிப்பார்" என நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார் அங்கிதா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com