உலகையே கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. ஆயிரக்கணக்கான உயிர்களை இதுவரை உலகம் இழந்துள்ளது. கொரோனா கோரத்தாண்டவம் உலகத்தில் எந்த ஒரு பகுதியையும் விட்டு வைக்கவில்லை. நல்ல நிகழ்ச்சிகள், சந்தோஷமான விழாக்கள் இல்லாமல் இன்று உலகமே ஒரு மூலைக்குள் முடங்கிப் போய் உள்ளது. தினமும் மரணச் செய்திகள் தான் தலைப்புச் செய்திகளாகி உள்ளன.