மகாராஷ்டிரா, ஹரியானாவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் 

மகாராஷ்டிரா, ஹரியானாவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் 

மகாராஷ்டிரா, ஹரியானாவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் 
Published on

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது.

288 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இதேபோல காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. அதேபோல் 90 தொகுதிகள் கொண்ட ஹரியானாவில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. 

இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஈடுபட்டனர். மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 24-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com