‘நட்பும் மச்சானும் துணை’ - ஹர்பஜன் சிங் நண்பர்கள் தின வாழ்த்து

 ‘நட்பும் மச்சானும் துணை’ - ஹர்பஜன் சிங் நண்பர்கள் தின வாழ்த்து
 ‘நட்பும் மச்சானும் துணை’ - ஹர்பஜன் சிங் நண்பர்கள் தின வாழ்த்து

நண்பர்களை போல இந்த உலகத்துல பெரிய வரம் எதும் இல்லை எனக்கூறி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் நண்பர்கள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுவதால் நண்பர்கள் பலரும் வாழ்த்துகளை பரஸ்பரமாக தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் நண்பர்கள் தின வாழ்த்துகளால் நிரம்பியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் ட்விட்டரின் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


 
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் நண்பர்கள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹர்பஜன், '' நம் நண்பர்களை போல இந்த உலகத்துல பெரிய வரம் எதும் இல்லங்க. ஜல்லிக்கட்டு சம்பவமும் சங்கமமும் நட்பால் தானே சாத்தியம் ஆச்சு. கும்பலா சுத்துனாலும் ஐயோ யம்மான்னு கத்தினாலும் எல்லாம் நட்பு தான். நட்பும் மச்சானும் துணை'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com