ஹரியானா மாநிலத்தில் முன்னாள் குருகிராம் ப்ளாக் சமிதி தலைவர் ஒருவர், சுங்கச்சாவடி ஊழியரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுங்கச்சாவடியில் வசூலில் ஈடுபட்டிருந்த அந்த ஊழியரிடம் தாம் முன்னாள் குருகிராம் ப்ளாக் சமிதி தலைவர் என்பதால் பணம் கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இதற்கு அடையாள அட்டையை காட்டும்படி அந்த ஊழியர் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் ஊழியரை தாக்கினார். மேலும் சுங்கச்சாவடி அறைக்குச் சென்று ஊழியரை சரமாரியாக தாக்கியும், அங்கு வைக்கப்பட்டிருந்த கணினி, தொலைபேசி உள்ளிட்டவையையும் சேதப்படுத்தினார். இந்தக் காட்சி அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.