குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஷாஹிபாக் பகுதியில் 24 வயதான பெண் ஒருவர் தனது கணவர், குழந்தை மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மாமியாரும், கணவரும் சேர்ந்து அந்த பெண்ணை அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்ததாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக அந்த பெண் பகல் நேரத்தில் சாப்பிட்டுவிட்டு உறங்கினால் அது பிடிக்காமல் அவரது மாமியார் அவரை அடித்து துன்புறுத்தி வருவதாக அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே இந்த பிரச்சினைக்காக காவல் நிலையம் வரை சென்று, போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்த சம்பவமும் நடந்துள்ளது. மேலும் ஆண் குழந்தையை பெற்றெடுக்காமல் பெண் குழந்தை பெற்றதற்காகவும் அவரை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.