குஜராத்தில் வெள்ளத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. 4,225 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
வெள்ள பாதிப்பால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. அம்மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள், தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான பருத்தி விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.