குஜராத்தில் சுயேட்சையாக களமிறங்கிய ஜிக்னேஷ் மேவானி வெற்றி

குஜராத்தில் சுயேட்சையாக களமிறங்கிய ஜிக்னேஷ் மேவானி வெற்றி

குஜராத்தில் சுயேட்சையாக களமிறங்கிய ஜிக்னேஷ் மேவானி வெற்றி
Published on

குஜராத் வட்காம் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் சுயேட்சையாகப் போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளை விட அதிக தொகுதிகளை கைப்பற்றி குஜராத்தில் 6வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது. இதுவும் பிரதமர் மோடியின் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் பன்ஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வட்காம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றுள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்தாமல் காங்கிரஸ் கட்சி ஜிக்னேஷ் மேவானிக்கு ஆதரவினை தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றுள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசை தொடர்ச்சியாக ஜிக்னேஷ் மேவானி விமர்சித்து வருகிறார். தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராகவும், தலித் மக்களுக்கு விவசாய நிலங்களை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் கடந்த 2016ஆம் ஆண்டு உனாவில் இவர் நடத்திய போராட்டம் இவருக்கு பலரின் ஆதரவுகளையும் பெற்றுத் தந்தது. இந்த போராட்டத்தில் 20,000-க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com