அதைத் தொடர்ந்து பதவியேற்பு விழா இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி எளிமையாக நடைபெற்று வருகிறது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று புதிதாக பொறுப்பேற்கும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். என்.ஆர். காங்கிரஸ் சார்பில் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா ஆகியோரும், பாஜக சார்பில் நமச்சிவாயம், ஊசுடு தொகுதி எம்எல்ஏ சாய் ஜெ.சரவணக்குமார் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.